Description
ஆரோக்கியம், உணவு குறித்த விழிப்பு உணர்வு எல்லையைத் தாண்டிப் போய், மக்கள் குழப்பத்தின் உச்சத்தில் நிற்கும் காலம் இது. வாட்ஸ்அப்பிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவிக் கிடக்கும் எண்ணற்ற தகவல்களால், ‘என்ன செய்தால் இது சரியாகும்?’ என்ற கேள்விதான் எல்லோர் மனதிலும். எல்லா கேள்விகளுக்கும் குழப்பங்களுக்கும் எப்போதுமான ஒரே விடை – இயற்கைதான்! இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்வதுதான்!
இயற்கை நிகழ்த்தும் அற்புதங்கள் ஏராளம். பஞ்சபூதங்களும், அவை தரும் மரம், பூ, காய், கனி போன்ற இயற்கைப் பொருட்களுமே நம் பல்வேறு பிரச்னைகளுக்கும் மருந்தாக அமையும்.
இயற்கையின் கொடைகளால் நம் உடல்நலக் கோளாறுகளை சரிசெய்யும் எளிய வைத்திய முறைகளை சொல்லத்தான் இந்த நூல். நல்ல மனநிலையும் உணவும்தான் ‘இம்யூன் சிஸ்டத்தை’ கட்டமைக்க அவசியத் தேவை. உயிர்ச் சக்தி பெருகினால், மனதில் உறுதியும் வைராக்கியமும் உடலில் ஆரோக்கியமும் பெருகும்.
இயற்கை மருத்துவத்தில் நீண்ட அனுபவம் பெற்ற மூத்த மருத்துவரும், சென்னையில் இயங்கும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியின் பேராசிரியருமான டாக்டர் எஸ்.டி.வெங்கடேஷ்வரன் அவர்களின் மேலான ஆலோசனைகளோடு இந்நூல் தயாராகி இருக்கிறது. டாக்டர் எஸ்.டி.வெங்கடேஷ்வரன், உடல் பருமனுக்கான சிகிச்சை தருவதில் புகழ்பெற்றவர்!
நூலாசிரியர் டாக்டர் ஆர்.கீர்த்தனா, நேச்சுரோபதி தவிர அக்குபங்ச்சர், நாடியைக் கவனித்து நோய் அறிந்து சிகிச்சையளித்தல், அதற்கான உணவு மற்றும் யோகப்பயிற்சி ஆலோசனை வழங்குவதிலும் அனுபவம் பெற்றவர். இவர்களின் தெளிவான வழிகாட்டல் உங்களுக்கு பெரிதும் பயனுள்ள வகையில் அமையும்.
Reviews
There are no reviews yet.