Description
முன்பெல்லாம் பிரியாணி என்பது மிலிட்டரி ஓட்டல்களில் மட்டுமே கிடைக்கும் ஓர் உணவாக இருந்தது. ஆனால், தன் அபார சுவையால் பலரையும் சுலபமாக அடிமையாக்கிவிட்ட பிரியாணி, இன்று ஒவ்வொரு வீட்டு சமையலறையையும் கைப்பற்றிக் கொண்டு தனி ராஜாங்கமே நடத்துகிறது.
இருப்பினும், பிரியாணி செய்வது என்றால் இன்றும் பல பெண்களுக்கு சிம்ம சொப்பனம்தான். ‘சரியா வருமோ வராதோ..’ என்று தயங்கித் தவிப்பதுண்டு. அதைப் போக்குவதற்கான கைத்துணையே இந்த நூல்.
பல்வேறு கட்டங்களில் ‘மல்லிகை மகள்’ இதழுக்கு சமையல் சக்ரவர்த்திகளான செஃப் தாமு, செஃப் ஜேக்கப்.. சமையல் நட்சத்திரங்களான கலைச்செல்வி சொக்கலிங்கம், மீனா ராதாகிருஷ்ணன், சுஜிதா ரூபன், பிரேமலதா அரவிந்தன் மற்றும் வாசகர்கள் வழங்கிய பிரியாணி மற்றும் புலாவ் வகைகளிலிருந்து தேர்ந் தெடுக்கப்பட்ட ரெசிபிகளை இந்த நூலில் தொகுத்து தந்திருக்கிறோம்.
அசைவம்தான் பிரியாணியின் ஆதார சுருதி என்றாலும், சைவப் பிரியர்களுக்காகவும் இதில் ஏராளமான வெரைட்டிகள் இடம்பெற்றிருக்கிறது. இவற்றின் சரியான அளவுகளும் தெளிவான செய்முறை குறிப்புகளும் உங்கள் கைப்பக்குவத்துக்கு புதுஅந்தஸ்து பெற்றுத் தரும். கூடவே, பிரியாணி செய்யும்போது கவனம்கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்களையும், பிரத்யேக நுட்பங்களையும் கூறியிருக்கிறார் செஃப் தாமு.
Reviews
There are no reviews yet.