Description
மல்லிகை பிரசுரத்தில் வெளியாகி பிரமாண்ட வரவேற்பு பெற்ற ‘முத்திரை வைத்தியம்’ நூலின் ஆசிரியர் டாக்டர் ஜெயலக்ஷ்மியின் அடுத்த படைப்பு இது. அக்குபிரஷர் மூலம் செலவே இல்லாமல், மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவு பயத்துக்கும் அவசியமின்றி, உடல்நலப் பிரச்னை களிலிருந்து குணம் பெறும் வழிகளை தருகிறார். நம் விரல் நுனிகளே நம்முடைய நோய்களைத் தீர்க்கும் அதிசயமாக செயல்படுவது, உங்களை நிச்சயம் வியப்பூட்டும்!
வெறுமனே மருத்துவ முறைகளை கற்றுக் கொண்டு, சிகிச்சை தர ஆரம்பித்துவிட்டவர் அல்ல டாக்டர் ஜெயலக்ஷ்மி. தனது நோய்களுக்கு நிவாரணம் தேடி, ஹோமியோபதி, நேச்சுரோபதி, அக்குபிரஷர் என்று பல்வேறு மாற்று மருத்துவ முறைகளை கற்றறிந்தவர். அவற்றின் மூலம் தன் நோய்களைக் குணப்படுத்திக் கொண்டவர். இப்படி, தான் கற்ற வைத்தியத்தின் முதல் பயனாளி இவரே என்பதால், இவர் தரும் வைத்திய முறைகள் எத்தனை பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கு வேறு சான்று தேவையில்லை.
Reviews
There are no reviews yet.