Description
‘‘இன்னிக்கு என்ன குழம்பு வைக்கிறது?’’
இதுதானே ஒவ்வொரு இல்லத்தரசிக்குமான தினசரிப் பிரச்னை!
‘யாமிருக்க பயம் ஏன்?’ என்று கைகொடுக்க வந்திருக்கிறது இந்த நூல்!
‘‘எத்தனை நாள்தான் பருப்புப் போட்டு சாம்பாரே வைப்பீங்க? இனிமே நாங்க சொல்ற இந்த விதவிதமான குழம்பு வகைகளை வச்சு ஜமாய்ங்க..” என்று ‘செஃப்’ தாமு உள்ளிட்ட சமையல் நட்சத்திரங்கள் சுவையான குழம்புக் குறிப்புகளோடு உள்ளே காத்திருக்கிறார்கள். உங்கள் உணவுக்கு மேலும் சுவை கூட்ட, அட்டகாசமான டிப்ஸ்களோடு குருமா ரெசிபிகளையும் வழங்குகிறார் செஃப் தாமு. ரேவதி சங்கரன் வழங்கும் ஓல்டு & கோல்டு குழம்பு வகைகள் ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ்!
என்னதான் காசு கொடுத்தோ, கார்டு தேய்த்தோ ஓட்டல்களில் விருந்தே சாப்பிட்டாலும்.. அது நாமே நம் கையால் தயார் செய்த உணவின் சந்தோஷத்தைத் தந்துவிடுவதில்லை. சுகாதாரத்துக்கும் உத்தரவாதம் இருப்பது இல்லை. இந்த உண்மை புரிந்தாலும், நம்மால் சுவை மாறாமல் செய்துவிட முடியுமா என்ற தயக்கமும் அச்சமும்தான் பலரையும் ஓட்டல்களை நாடிச் செல்லவைக்கிறது.
இந்த அச்சத்தையும் தயக்கத்தையும் உடைக்கவே இந்நூல்!
செய்வதற்கு சுலபமான & அதிகம் செலவும் வைக்காத, உங்கள் கையாலே சுகாதாரமாக செய்து ருசிக்க எண்ணற்ற குழம்பு மற்றும் குருமா ரெசிபிகள் உள்ளே அணிவகுக்கின்றன. பல்வேறு கட்டங்களில் ‘மல்லிகை மகள்’ இதழில் வெளியாகி, வாசகிகளின் சமையல் அறையில் அரங்கேறி, பெரும் பாராட்டு பெற்றவை என்பது இந்த ரெசிபிகளின் சிறப்பம்சம்!
Reviews
There are no reviews yet.