Description
உடல் ஆரோக்கியம் என்பதுதான் இன்று நம் சமூகத்தை கவலைகொள்ள வைத்திருக்கும் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது!
‘அக்கரை பச்சை’யில் நாம் கொண்ட மோகம் மட்டுமல்ல.. பேராசையின் பின்னணியில் வகுக்கப்பட்ட வணிக யுக்திகளுக்கு நாம் இரையாகிப் போனதும்தான் இதற்கான காரணங்கள்!
உணவையே மருந்தாகக் கொண்டு வாழ்க்கையை உற்சாகமாக கழித்த நிலை போய், இன்று சாதாரண உடல் உபாதைகளுக்குகூட சேர்த்து வைத்த மொத்த சொத்தையும் இழக்கவேண்டிய துர்பாக்கிய நிலை! இதைத் துடைத்தெறியும் பெரும் பயணத்துக்கான ஒரு சிறுமுயற்சியே இந்த நூல்.
மருந்து, மாத்திரைகள், அவற்றின் பின்விளைவுகள் என்ற சுழற்சிக்குள் சிக்கிவிடாமல் தடுக்க, நடைமுறை வாழ்வின் சின்னச் சின்ன உடல்நல பிரச்னைகளுக்கு நம் பாரம்பரிய வைத்திய குறிப்புகளை தந்திருக்கிறார், மூத்த சித்த மருத்துவர் டாக்டர் திருநாராயணன். அவர் ஆலோசனையின்படி, உணவையே ஆரோக்கிய மருந்தாக்கும் ரெசிபிகளை அடுக்கியிருக்கிறார் அவருடைய துணைவியார் திருமதி. வி.சுந்தரவல்லி.
சமூக நலனையே முதன்மையாக கொண்டு இலவச மருத்துவ சேவை, கிராம வைத்திய ஆய்வுகள் என்று பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் டாக்டர் திருநாராயணனின் இந்த வைத்தியக் குறிப்புகள், ஒவ்வொரு வீட்டுக்குமான அவசிய மருத்துவக் கையேடாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.
Reviews
There are no reviews yet.